Saturday 9 June 2012

ராஜு நாராயணசாமி IAS


வாழ்க்கை

ராஜு நாராயணசாமி, கேரளா மாநிலம் சங்கனாசேரியில் 1968'ஆம் ஆண்டு மே 24'ல் பிறந்தவர். இவரைப் பற்றி..
1983'ல் மேல்நிலை பள்ளி தேர்வில் (SSLC), கேரளா மாநில அளவில் முதல் மதிப்பெண்.
1985'ல் பியுசி'ல் (PRE UNIVERSITY COURSE), கேரளா மாநில அளவில் முதல் மதிப்பெண்.
பொறியியல் பட்டதாரி உளச்சார்பு தேர்வில் (GATE) முதல் மதிப்பெண்.
அனைத்து இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ALL INDIA IIT) கணினி அறிவியலில் முதல் மதிப்பெண்.
இந்திய ஆட்சியர் பணி (IAS ) நுழைவு தேர்வில் முதல் மதிப்பெண்.


இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னையில் இருந்து திரு.ராஜு நாராயணசாமி படித்து வெளியே செல்லும் போதே, அமெரிக்காவில் புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் கல்வி நிறுவனம் (MASSACHUSETTS INSTITUDE OF TECHNOLOGY) ஊக்கதொகையுடன் கூடிய கல்வி வாய்ப்போடு இவரை அழைத்தது, ஆனால் இவர் செல்லவில்லை.

இந்திய ஆட்சியர் பணி

ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த அவர், நமது அரசாங்கம் ஒரு ஐஐடி மாணவருக்கு பல லட்சம் ரூபாய் செலவிடுகிறது, அதற்கு பதிலாக நாம் ஏதாவது செய்வது நமது தார்மீக கடமை என்று நம்பினார். ஒவ்வொரு ஏழை மக்களும், பேருந்தில் பயணம் செய்யும் போதும், பெட்ரோல், டீசல் மற்றும் அவர்கள் உடுத்தும் துணி முதற்கொண்டு கலால் மற்றும் விற்பனை வரி செலுத்தும் பணத்தை தான் அரசாங்கம் நமக்கு செலவிட்டது, எனவே இந்த நாட்டின் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி இந்திய ஆட்சியர் பணியில் சேர முடிவுசெய்தார். பணம் சம்பாதிக்க அவர் இத்துறையை தேர்ந்தெடுக்கவில்லை என்பது அவரது வாழ்கையின் பின் பக்கத்தை பார்த்ததாலே புரியும். 

பணியில் நேர்மை

நேர்மையான அதிகாரியான இவர், பத்தாண்டு காலத்திற்கு பிறகு இந்திய ஆட்சியர் பணியில் இருந்து கேரளா அரசால் வெளியேற்றப்பட்டார். ஏன் தெரியுமா ?
நேர்மை நேர்மை நேர்மை !!!


ஒரு ரியல் எஸ்டேட் முகவர் ஒரு நெல் வயலை வலைத்துபோட்டார், இது சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஒன்று, எனவே விதிவிலக்கு கேட்டு துணை ஆட்சியராக இருந்த திரு.ராஜு நாராயணசாமியிடம் போனார். நேரில் சென்று பார்த்தவரிடம், அந்த முகவரின் செயலால் அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து வரும் கழிவு நீர் மற்ற வயல்களில் தேங்கி விடும் என்று 60 ஏழை விவசாய்கள் புகார் செய்தனர், எனவே அதற்கு அவர் அனுமதிக்கவில்லை. இதனால் அரசியல்வாதிகளால் தீவிரமாக நிர்பந்தப்படுத்தபட்டார், இருந்தும் அனுமதி தர மறுத்துவிட்டார். இதுதான் அரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட இவரின் முதல் மோதல்.


திரு.ராஜு நாராயணசாமியின் திருமணம் முடிந்த சில நாட்களில் அவரது மாமனார் ஒரு பொது சாலையை மூடி சுவர் ஒன்றை எழுப்பினார், மக்கள் நாராயணசாமியிடம் முறையிட்டனர், இவரும் பேசி பார்த்தார் பயனில்லை, உடனே காவலர்கள் துணையுடன் சுவரை அகற்றினார், இதன் விழைவு இவரின் திருமண வாழ்க்கை முறிந்தது.


மாவட்ட ஆட்சியராக இருந்த போது 11 கோடி பணம் அரசுக்கு வரி செலுத்தாமல் பதுக்கி வைத்த ஒரு பெரிய மதுபான தொழிற்சாலையை சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்தார். ஒரு அமைச்சர் நேரடியாக அவரை தொலைபேசியில் அழைத்து பறிமுதல் செய்யப்பட்டவைகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டார். நாராயணசாமியோ அமைதியாக அது கடினம் என்று கூறிவிட்டார். இதற்கு நீங்கள் பின்னால் வருத்தபடுவிர்கள் என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார் அமைச்சர்.


அவரது மாவட்டத்தில் ஏழை விவசாயிகளுக்காக 8 கோடிரூபாய் செலவில் பாலத்துடன் கூடிய ஒரு பொது வழி ஏற்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்காக 8 கோடி ரூபாய் செலவு செய்ததற்கான ஒரு வடிவில் கையெழுத்திடும் கோப்பு அவரிடம் வந்தது, நேரில் சென்று ஆய்வு செய்து, அது பலவீனமாய் இருப்பதை உணர்ந்தவர், மழைக்காலம் முடித்ததும் இதில் கையெழுத்திடுவதாக கூறிவிட்டார். அவர் எதிர்பார்தததுபோல் மழைகாலத்தில் அது சிதைந்து போனது. மக்களின் பணம் 8 கோடி ரூபாயை காப்பற்றினார் ஆனால் இதன் மூலம் நிறைய எதிரிகளையும் சம்பாதித்தார்.


நேர்மைக்கு கிடைத்த பரிசு

நேர்மையானவர்களை தான் அரசியல்வாதிகளுக்கு பிடிக்காதே, எனவே இவரை அரசாங்க விடுப்பில் அனுப்பிவைத்தது, பின் அதிகாரம் இல்லாத பள்ளிகள் மாநில கூட்டுறவு அமைப்பாளராக இவரை அரசு நியமித்தது. இதுதான் நேர்மையான ஒரு அதிகாரிக்கு நமது அரசியல்வாதிகள் தரும் பரிசு. மத்திய அரசிடமாவது மாற்றலாகி போகலாம் என்றால், அதையும் இவர்கள் தடுத்து வைத்துள்ளார்கள். இப்பொழுது கேரளா அரசின் இளைஞர் விவகாரத்துறை செயளராக உள்ளார்.


இதில் கவனிக்க படவேண்டிய ஒன்று, படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த கல்வி அமைப்பு இவரை அழைத்தும், மக்களுக்காக சேவை செய்ய நினைத்து இன்று குடும்பம், பதவி என அனைத்தையும் இழந்தும் தனது கொள்கையில் விடாப்படியாக உள்ளார்.

இவர் இதுவரை 23 புத்தகங்கள் எழுதியுள்ளார், கேரளா அரசின் சாகித்ய அகடமி விருதையும் ஒரு முறை வென்றுள்ளார்.

No comments:

Post a Comment