Tuesday 24 July 2012

சாந்தி சௌந்தராஜனின் நிலை !


சாந்தி சௌந்தராஜன் 2006 இல் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டரில் வெள்ளி பதக்கம் வென்றவர், பாலின சோதனையில் தகுதியிழந்ததால் இந்திய தடகள கூட்டமைப்பால் தடை செய்யபட்டு, இன்று ஒவ்வொரு நாளும் ரூ 200 சம்பாதிக்க செங்கல் சூளையில் எட்டு மணி நேரம் கடினமாக உழைக்கிறார்.


இதே போன்று தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கேச்டர் செமென்யா உலக சாம்பியன்ஷிப்பில் வென்று, பின் பாலின சோதனையில் தோற்றார்.அதன்பின் தென் ஆப்பிரிக்கா அரசு அவரின் மானத்தை மற்றும் உலக விளையாட்டு நிலையை பாதுகாக்க போராடியது, விழைவு இப்பொழுது லண்டன் 2012 ஒலிம்பிக்கில் தனது நாட்டின் கொடி தாங்கி விளையாடயிருக்கிறார்.


சாந்தியின் பெயர் மற்றும் சாதனைகளை தடகள பதிவுகளில் இருந்து அழித்துவிட்டனர், இதனால் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.


செங்கல் சூளையில் என் கைகள் வலியால் எரிகிறது, தோல் உரிந்து கொப்புளங்களாக உள்ளன. சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் என்ன தவறு செய்தேன்? என் கையில் இல்லாத ஒன்றுக்காக நான் ஏன் தண்டிக்கப்படுகிறேன் என்று ஒரு பத்திரிக்கையில் கூறியுள்ளார்.


அன்றைய முதல்வர் கருணாநிதி ரூ 15 லட்சம் பரிசுடன், ரூ 5,000 சம்பளத்தில் ஒரு பயிற்சியாளர் வேலை கொடுத்தார், பணத்தை சகோதரியின் திருமணத்திற்கு செலவிட்டார். மேலும் அது ஒப்பந்த அடிப்படையில் உள்ள வேலை.


புதுக்கோட்டையில் உள்ள கத்தகுறிச்சியை சேர்ந்த சாந்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ஒரு பியூன் வேலையாவது தருமாறு கோரியுள்ளார், பயனில்லை.


சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி HYPER-ANDROGENISM கண்டறிய நவீன முறையை அறிமுகபடுத்தியுள்ளது, அதில் இவர் வெற்றி பெற்று மீண்டும் விளையாடு வாய்ப்புள்ளது. இவருக்கு இந்தியாவில் செய்த சோதனை பழைய உள்நாட்டு முறை.


ஆனால் அனைத்திற்கும் முன்பு, சாந்திக்கு ஒரு நல்ல வேலை வேண்டும்.