Sunday 3 June 2012

சதுரங்க வீரர் விசுவநாதன் ஆனந்த் !!



சதுரங்க வீரர் விசுவநாதன் ஆனந்த் !!


நமது பெருமைக்குரிய தமிழரான, விசுவநாதன் ஆனந்த் சென்னையில் 1969ஆம் வருடம் டிசம்பர் 11’ல் பிறந்தவர். இவர் இதுவரை ஐந்து முறை உலக சதுரங்க (WORLD CHESS CHAMPIONSHIP) போட்டியில் வென்று சாதனை படைத்தவர். முதன் முதலில் 1983இல் தனது 14 வயதில் இந்திய சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார் . தனது 15 வயதில் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் வென்றார். தனது 16 வயதில் மேலும் இருதடவை இந்தவிருதைப் வென்றார்.


1987இல் முதன் முதலில், உலக இளநிலை வாகையாளர் (WORLD JUNIOR CHESS CHAMPIONSHIP) பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அடைந்தார். மேலும் 2000ஆம் ஆண்டில் தெகரானில் நடைபெற்ற போட்டியில் வென்றதன் மூலம் உலக சதுரங்கப் (WORLD CHESS CHAMPIONSHIP) போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அடைந்தார். மேலும் 2007, 2008 மற்றும் 2010லும் உலக சதுரங்க வாகையாளர் (WORLD CHESS CHAMPIONSHIP) பட்டத்தை வென்றார்.


இப்பொழுது ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இஸ்ரேலின் போரிசு கெல்பண்டை சமன்முறி ஆட்டத்தில் வீழ்த்தியதன் மூலம் ஐந்தாவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.


இதுவரை 50கும் மேற்பட்ட சர்வேதச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வென்றுள்ள இவர் அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் BOOK OF THE YEAR விருது, பத்மபூஷன், சதுரங்க ஆஸ்கார் - (1997, 1998, 2003, 2004, 2007, 2008), பத்மவிபூஷன் விருது ஆகிய விருதுகளை பெற்றவர்.

No comments:

Post a Comment